• Thursday, July 8, 2021

    முன்னனுபவம் உள்ளவர்க்கு மட்டும் புரியும் கதை !


    நிலவு தேய்ந்த அந்தகார இரவுகள்
    காற்றுக்கு வேலி போடும் ஒற்றைப் போர்வை
    ஒரே தலையணை !
    போர்வைக்குள் பொழியும் நிலவாய் நீ !

    முகம்பார்த்து விரல்மேய
    நவரசம் காட்டும் திரை !
    உன் நெளிவுகளில்
    நிலைகொள்ளும் கரம் !
    அவ்வப்போது சிணுங்கும் நீ !
    அள்ளி அணைக்கும் நான் !

    Wednesday, June 8, 2011

    இந்தியா இலங்கை மக்கள் காமம் ஜதார்த்தம்

    கழிவறையில் கண நேரத்தில் உதித்த சிந்தனைகளை அப்டியே மணம் குறையாம அள்ளிட்டுவந்து போட்டிருக்கன். படிச்சுட்டு எப்டி டேஸ்டா இருந்துச்சா எண்டு சொல்லிட்டு போங்கோ:

    Monday, February 14, 2011

    காதலித்து வா - காதலர் தின கவிதை


    வெற்றியின் அதிகாலை நிகழ்ச்சி ''நிலா கிறுக்கல்கள்'' ல் என்னால் வாசிக்கப்பட்ட ஒலிவடிவம்..


    காதலித்து வா ....
    காதல் வானம் கனவுகளின் கோட்டை மீது
    கம்பீரமாய் சிரிக்கிறது - இதில்
    பறந்துவிட தினம் தினம் துடிக்குது
    ஆயிரம் அரும்பிய மொட்டுக்கள்.
    தகுதிகள் இருந்து விட்டால்

    Sunday, February 14, 2010

    அழகே என்னை காதலி..


    கவிதைய மெனக்கட்டு வாசிக்க அலுப்பா இருந்தா ஒலிவடிவத்த இங்கே கேட்கலாம்..
    Get this widget | Track details | eSnips Social DNA


    காதல் கனவுகளில் கரைசேர்ந்த ஓடம்
    உள்ளங்கள் சேர்ந்து உணர்வுகளை உருக்கும் உன்னத உணர்வு
    பங்குனி வெயிலில் பருவம் பொய்த்து பெய்த மழை
    நானும் நனைந்துவிட்டேன்-கேள் கொஞ்ச

    Monday, December 28, 2009

    கண்களால் கேட்கின்றேன் என் காதலை ஏற்றுக்கொள்....

    8_love_hurts.gif image by funkbutter
                                    இமைகள் துடிக்கிறது 
                                                                                                       உன்னைக்காண
                                    உதடுகள் தவிக்கிறது 
                                                                                          என் காதலைச்சொல்ல
                                    கைகள் வருடுகிறது பேனாவில், 
                                                                                  உணர்வால் கடிதம் வரைய
                                    நெஞ்சம் கெஞ்சுகிறது
                                                                                      நேற்றைய நினைவுகள் பகிர
                                    உரோமங்கள் நெருடுகிறது
                                                                   உன் நுனிவிரல் வருடல்கள் காண 

    கண்களால் கேட்கின்றேன் என் காதலை ஏற்றுக்கொள்
    கெஞ்சிய  நெஞ்சமும் நெருடிய உரோமமும் 
    வருடிய கைகளும் தவித்த உதடுகளும் 
    உறைந்துவிடுகிறது உன் ஓரவிழி காண்கையில்-ஆதலால்

    கண்களால் கேட்கின்றேன் என் காதலை ஏற்றுக்கொள்
    உன்னை காணாதபோது துடித்த இமைகள் துடிக்கமறுக்கும் 
    இயல்பில் புரிந்திடு இவனின் இறைஞ்சல்களை-இலையேல்
    இருஇமை ஒருமடலாகி விழியினுள் காதல் வலியுருக்கொண்டு
    இறப்பேன் ஆனால் உயிருடன் இருப்பேன்.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Tuesday, December 8, 2009

    பக்கம் இருந்தும் விலகிப்போகிறேன்...


    நித்தம் ஒரு சந்தமாய்
    முத்தம் என்ற சொல்லினால்
    என் உள்ளம் கொண்ட
    பெண்ணல்ல.. 
    பேரழகு - என்னுயிர்
    அருகில் இருந்து 
    அனைத்துமாகினாய்
    சூரியகதிர்களில் 
    பனிமழை தந்தாய்
    நிலவின் தண்மையில் 
    உஷ்ணம் தந்தாய்
    புயலின் வாயினில் 
    தென்றலாய் கமழ்ந்தாய்
    கொட்டும் மழையில் - உன் 
    குடைக்குள் அணைத்தாய்..!
    திட்டும் உலகின் 
    வஞ்சனை பொறுத்தாய்
    திகட்டும் இன்பம் 
    தீண்டப்பொறுத்தாய்..!

    உடலாகி உயிராகி
    சுகமாகி ரணமாகி
    நிழலாகி நினைவாகி
    ஒளியாகி இருளாகி
    தாயாகி சேயாகி
    யாதுமாகி நின்றாய்
    'போதும்' என்ற சொல்லின் 
    சுகங்கள் கொண்டேன்..

    வெற்று உடலுக்குள் 
    தூறும் மழையாக
    சுகங்கள் தந்தவளே !
    தூற்றும் உலகை 
    வென்றுகாட்ட
    பக்கம் இருந்தும் 
    விலகிப்போகிறேன்.
    சொர்க்கத்தின் வேதனை
    வேதனையில் சொர்க்கம் - காதல்.

    Wednesday, October 21, 2009

    உன்னைச்சரண் அடைவேன்.


    கண்கள் ஒருகதை சொல்ல
    கன்னம் பலரகம் கொள்ள
    நெஞ்சம் நீதான் வேண்டும் என்றதே
    கொஞ்சம் எனைக்கண்டு நீ செல்லடி
    உன் ஓரப்பார்வை விழியில்தான்
    என் இதயம் துடிக்குது அன்பே
    நேரே உன்னை கண்டால் போதும்
    ஜூன்மாதம்கூட குளிரும்.
    உந்தன் இரவில்
    நான் பக்கம் வேண்டாம்
    உன் படுக்கை அறையின்
    ஜன்னல் ஓரத்தில்
    காற்றின் வேகத்தில்
    மெல்ல அசையும்
    இலையின் மறைவில் நிலவாய் உன்னை ரசிக்க வேண்டும்

    Tuesday, October 20, 2009

    எப்படி சொல்லப்போகிறாய்..?


    நீ என் அருகில் இருந்தால்
    உன்கண்கள் காட்டிக்கொடுத்திருக்கும்
    நீ காதலிப்பதை
    நீ என்னோடு கதைத்திருந்தால்
    உன் குரலில் நளினம் சொல்லியிருக்கும்
    நீ காதலிப்பதை
    நீ என்னோடு கடிதத்திலாவது உறவாடியிருந்தால்

    Wednesday, October 14, 2009

    உனக்காக...


    உதிரத்தில்
    ஊறிய
    உன்னை
    உதிரத்தில்
    உறைந்துவிட்ட
    உன் நினைவை
    உதிரத்தில்
    உதிர்ந்த
    உன் காதலை
    உயிருள்ளவரை
    உளறும் - இந்த

    Monday, October 12, 2009

    காதல்தானே செய்தேன்..!


    ஆதவா நீ போகும்போது
    என் நினைவில் கொஞ்சம் கடனாய் எடுத்துசெல்
    நினைவின் சுமைகள் நித்தம் என்னை நெருடிக்கொல்கிறதே
    கண்கள் தூங்கும் நேரம் மனம் தாண்டவம் ஆடிடுதே
    கண்கள் விழித்த நேரம் மனம் மண்ணுள் துயில்கிறதே
    உலகும் செய்த பாவம் பல ஊரார் செய்த பாவம்

    Saturday, October 10, 2009

    நீதானே..நினைவாக.


    சின்னஞ்சிறு மொட்டுக்கள்
    சிட்டுக்களாய் சிறகடித்துதிரிந்த
    சிப்பிக்குள் இரட்டை முத்தாக-நாமும்
    சிலகாலம் உலகை மறந்திருந்தோம்-உலகும் தான் மறந்திருந்தது

    ஒற்றை மிட்டாயில்
    ஒரு வாய் ஒருகடி
    ஓராயிரம் சுவைகள் அதில்-உதட்டின்
    ஓரத்தில் படிந்த கறை அப்பபோது நாவிற்கு

    Wednesday, October 7, 2009

    நிலவைத்தேடி.......


    உனக்காக...
    காத்திருந்த தவிப்புக்கள்
    உளறாத வார்த்தைகளாய்-இன்னும்
    உள்ளத்தில் உறைந்துகிடக்கிறது

    இதயவாசலில்
    புகுந்திடும் குருதியிலும்
    உன்னைத்தேடிய துடிப்புகளின் எதிரொலி
    கேட்டுக்கொண்டுதான் கிடக்கிறது.

    இது காதலின் புது கோணமா..?










    நானும் காதலிக்கிறேன் என்றான் ஒருவன்
    என்னையும் காதலிக்கிறான் என்றாள் ஒருத்தி
    பரஸ்பரம் பாடிக்கொன்டார்கள்.
    ஏக்கத்தொனிக்கு விடைகொடுத்ததென்னவோ
    தொலைபேசி மணிதான்..
    மாறிவந்த அழைப்புத்தான் இவர் மாற்றத்துக்கு காரணம்.
    சாரி வ்ரோங் நம்பர் என தொடங்கிய கதைதான் இன்று

    எட்டியும் எட்டாத பழம்...



    காதலே நீ எங்கு சென்றாய்..?
    உயிர்தாகத்தின் கேள்வியாய்
    உறவுகள் பதித்த தடயத்திலேயே
    மீண்டும் கால் வைத்து நடக்கிறேன்.
    போகுமிடம் அறிந்தும் எதோ அதிசயம் நடந்திடாதா என்ற நம்பிக்கை.
    காதல் ஒரு அழகிய கொடிதான்
    கொடிதந்த மென் மலரிலே

    கன்னி கலையாத காதல்.


    நினைவுகள் நூறு
    கனவுகள் ஆயிரம்
    காதலன் கனவு அது
    கட்டி வைத்த மண் வீடோ
    நெஞ்சணைக்க பஞ்சணையும் வஞ்சனைக்கு பல நட்பும்-உண்டு இல்லையே
    வந்தணைக்க ஓர் நெஞ்சம்
    முந்தானை வாசமும்

    Wednesday, August 19, 2009

    பெண்ணே நீயும் நிலவோ..!



    பெண்ணே நீயும் நிலவோ

    பெயர் சொல்ல முடியா கனவோ
    இதயம் துடிக்கும் கணத்தில்.........
    உன் நினைவுகள் வந்து மறையும்
    சிறு நட்சத்திரம் ஒரு தேன் நிலவு
    மெல்லப்பாடிவரும் மென் இசைக்காற்று
    செல்லத்தலையசைக்கும் அழகு அல்லி மலர்
    இவை யாவும் யாவும் நீயோ
    உன்னை காணத்துடிக்கும் இரவும் நான்தானோ..!
    ஏய் அழகு நிலா..!
    எனை மயக்கும் நிலா..!
    ஏணி வைத்து ஏறி உன் அழகை ரசிக்கப்போறேன்
    அங்கம் எங்கும் தங்க சிறு

    ஒரு பேதையின் கனவு..


    ஏ.. பசுங்கிளியே..!
    செல்லக்காதலனோடு
    கொஞ்சிக்கதை பேசுகிறாயா..?
    உனைப்பார்க்கையில் கண்களில் நீர்துளிர
    எனக்கும் காதலிக்க ஆசை கிளியே.
    கண்கவரும் கொள்ளை அழகு

    காதலித்துப்பார் கொஞ்சம்...


    காதல் என்பது கனவுகளின் தொகுப்பு.. 
    காவியங்களின் தலைப்பு..
    கண்களில் பூவாகி உள்ளத்தில் காயாகி 
    கனவுகளில் கனியாகும் தேன்கனி.
    உள்ளங்கள் இடம்மாறி உயிருக்குள் 
    ஊடுருவும் உன்னத உணர்வு.
    உயிர் இருப்பதை உணர வைக்கும் 
    ஊடல்களின் இருப்பிடம்-காதல்

    கண்களை மூடிப்பார்..
    நினைவுகள் கோர்த்துப்பார்..
    உள்ளங்கள் தேடிப்பார்..
    உணர்வுகளை உருக்கிப்பார்..
    நெஞ்ஞங்கள் துளைக்க 
    நெருடல்கள் வருட..
    காதலித்துப்பார் கொஞ்சம்.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner