நிலவு தேய்ந்த அந்தகார இரவுகள்
காற்றுக்கு வேலி போடும் ஒற்றைப் போர்வை
ஒரே தலையணை !
போர்வைக்குள் பொழியும் நிலவாய் நீ !
முகம்பார்த்து விரல்மேய
நவரசம் காட்டும் திரை !
உன் நெளிவுகளில்
நிலைகொள்ளும் கரம் !
அவ்வப்போது சிணுங்கும் நீ !
அள்ளி அணைக்கும் நான் !



















