• Monday, June 13, 2011

    உச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்

    நண்பர்களே கதையின் பாகம் ஒன்றை படிக்காதவர்கள் இந்த லிங்கில் சென்று படித்துவரவும். இல்லாட்டி புரியாதுங்க மாட்டார்...பாகம்-1 க்கு

    உச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா



    சங்கீதா வழமையப்போல அதே சிரிப்போட கதவை திறந்தாள். அதுதான் எப்பவும் எனக்கு போர்ன்வீட்டா. நான் செருப்ப கழற்றிட்டு உள்ள போகமுதல் அவள் சட்டென்று போய் என்கதிரையை எடுத்து வைத்து அங்கங்க சிந்தியிருந்த சாப்பாடு துண்டுகளை தட்டிவிடுவாள். அப்படி இருந்தும் ஒன்றிரண்டு துகழ்கள் காட்டிக்கொடுத்திடும். காலைச்சாப்பாட்டடை. அப்படித்தான் இன்றைக்கு ''பாண் சாப்பிட்டிருக்கிறியல் போல'' என்று கொஞ்சம் வாயை சுழித்துக்கொண்டு கேட்க பதிலாய் வந்த அந்த சிட்டுக்குருவிச்சிரிப்பை ரசித்தவாறே கதிரையில் அமர்ந்தேன்.

    Sunday, June 12, 2011

    உச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா

    காலி வீதியில் புயல் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்னுடைய சைக்கிள்.   அப்பாவிடம் சாக்லேட் கேட்டு அடம்பிடிக்கும் பிள்ளையின் கால்களைப்போல் என்கால்கள் சைக்கிள் மிதியை மாறிமாறி உதைக்கின்றன. என்னால் பக்கத்தில் சீறிக்கொண்டுவரும் வண்டிகளைக்கூட கவனிக்கமுடியவில்லை. தொண்நூற்றாறில் கிபிர் வருகுதெண்டு அம்மாண்ட சீலைய பிடிச்சுக்கொண்டு பங்கருக்குள் ஓடியதுக்குப்பின் இன்றுதான் இவ்வளவு வேகமாக என்கால்கள் ஓட்டம்கொள்கிறது. 

    Thursday, June 2, 2011

    மனம் போல் வாழ்க்கை. வீரியமா? விபரீதமா?

    ரொம்ப நாளாவே எனக்கொரு கடமை பாக்கியிருந்துச்சு.. அத எப்டியாவது நிறைவேத்திடனும் நிறைவேத்திடனும்னு பாத்திட்டிருந்தன் இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சுது.. சிலபல நாட்களுக்கு முதல்ல (சுமார் ஆறு மாசம் தாங்க) என்னைய ஜனா அண்ணா கேட்டிருந்தார் 'டேய் அஷ்வின் தம்பி நீ 'மனம் போல் வாழ்வு ' என்ற தலைப்புல ஒரு பதிவு போடுடா எண்டு. சரி நானும் போடுவம் போடுவம் எண்டு வந்தா மனசும் உடம்பும் கொஞ்சம் இடம் கொடுக்கல. சரி இண்டைக்காவது போட்டிடுவம் எண்டு வந்துட்டன்.  

    Monday, February 28, 2011

    சும்மா இருக்குறதெண்டா சும்மாவா?

    மனுஷனுக்கு ஆயிரம் ஆசை .. அதுல நமக்கு இருந்த ஆசை ஒருதடவையாவது சும்மா இருக்கணும்.. (சும்மான்னா அந்த சும்மா இல்லைய்யா) அப்புடி என்ன பெரிய கஷ்டமா ? எண்டு கேக்குற மத்தவங்கள போலதான் இருந்தான் இண்டைக்கு காலைவரை.. இப்பதான்யா புரியுது சும்மா இருக்குறதுல எம்புட்டு பெரிய சூட்சுமம் இருக்கெண்டு..
    யாராச்சும் கேளுங்களேன் என்ன நடந்துச்சு எண்டு.. கேளுங்களேன்..


    Saturday, October 16, 2010

    சீனியோரிட்டியின் பச்சைப்பக்கங்கள்..



    பல மைல் தூரத்தில் இருந்து பல மைற்கற்களை கடந்து பல்கலை கழகம் என்ற புரையோடிய கனவுகளுடன் சாதிக்க துடிக்கும் விழிகளாய் தடம் பதிக்கும் இளரத்தங்களின் துடிப்புகள் மறுக்கப்பட்ட கதை, இது பல்கலை தந்த கதை
    பல்கலை நுழைவாயிலில் நாடி நிற்கையிலே பல கனவுகள், பாடசாலை அடித்தளமிட்ட களங்களின்  விஸ்தீரமான கேந்திரமாக பல்கலை கழகம் எம் எதிர் பார்ப்பில்.....

    பள்ளி சிட்டுக்களாய் வயதுகளின் பரிணாம வளர்ச்சியிலே

    Monday, May 17, 2010

    தொடர்கதை.. நம் வாழ்க்கை.



    தனிமையில் நடந்து செல்கிறேன் கூட்டத்தில் ஒருவனாய் காலிவீதியில். தெருவிளக்குகள் என்னைப்பார்த்து பல்லிளிக்க இரவின் நிஷப்த்தத்தை தேடும் கண்களில் பட்டதென்னவோ அடுக்குமாடிக்கட்டடங்களும் ஆர்ப்பரிக்கும் மக்களும். இன்று அக்ஷயத்திருதியை வேறு பொன்  சேர்க்ககூடிவிட்டார் பலர். நடந்தபாதை எங்கும் முட்டியது தமிழ் மூச்சுக்கள்தான். மூச்சோடு மூர்ச்சிரைத்து அடங்கிவிட்டிருந்ததது என்மூச்சு. மகிழ்ச்சிக்கு குறைவில்லை போலும், இன்றும் கூட்டம் கூட்டமாய் வெட்டிப்பேச்சு வாயினில், வெள்ளைப்பூச்சு நெற்றியில்.

    வீதியோரத்தில் கரையொதுங்கிய பேருந்துகள் கடுகதிப்பயனத்துக்காய் தயார்நிலையில், நெடுதூரப்பயணம் இன்றுவரை நெருக்குவாரப்பயணம், உறங்கிய யாழ்தேவிக்காய் விழித்துக்கொண்ட தற்காலிக/நிரந்தர முகவர்கள் இந்த பேரூந்துகள். அவை சுற்றி ஆருடம் பேசும் அசகாயர்கள் சிலரும் ஆரியம் பேசும் வீரியர் பலரும். இவர்களில் ஒருவர் உள்நாட்டு அகதிகள் மற்றவர் உள்நாட்டு உல்லாசப்பயணிகள். ஏறெடுத்துப்பார்க்கிறார் என்னையும் ஏதோ எதிர் நாட்டார் போல. அத்துணையும் மனசுக்கு பழகிப்போன ஒன்று.. இன்று நேற்றல்லவே  இக்கதை..

    Sunday, December 20, 2009

    ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கமலா..


    tears
    இருண்ட அறைக்குள்ள விட்டில் பூச்சியோட கதைபேசிகொண்டு கமலா
    என்னவோ ஏக்கம் கமலான்ர மனசுக்குள்ள
    பான்கூட போடல முகமெல்லாம் வியர்வை முட்டி மோதிட்டு இருந்துச்சு
    ஏன் என்டுகேக்குறமாதிரியே சின்னவன் மழலை மொழிபேச மெல்லமா தட்டிகொடுத்துகொண்டிருந்தாள்
    மெல்லமா கண்ணயர்ந்திட்டான் போல தூக்கிட்டுபோய் தொட்டில்லகிடத்தி ஆட்டிவிட்டு வந்திருந்தாள்
    இடையில ஏதோ நினைப்பு திடுக்கிட்டு எழும்பி அலுமாரிய தொறந்தாள் நேத்துதான் ஆபீசால வரெய்க சர்ச்சுக்கு முன்னால பய்மேண்டுகடையில நைற்றி  ஒன்டுவாங்கினவள் அளவோ எண்டுகூட பாக்கேல எடுத்துமாட்டிக்கொண்டாள்
    கட்டில் சீலைய கொஞ்சம் சரிப்பண்ணிவிட்டுடு சுவர்கறையா தலைய வச்சு
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner