நவீனத்துவம் பெற்ற மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்றாக இன்று மாறியிருக்கிறது ஆபாசம் என்ற பதம். உண்மையில் ஆபாசம் என்பது என்னவென்று சொல்வதானால், மனித பாலுணர்வுகளை கிளர்ந்தெழ செய்கின்ற காட்சிகள், வார்த்தைகள், சிற்பங்கள் என்பவற்றையே சொல்லமுடியும். ஆக இப்படிப்பட்ட ஆபாசத்தின் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது ஏதோ ஒருவிதத்தில் மனிதனை மயங்கச்செய்த்து தங்களுடைய சுய லாபங்களை தீர்த்துக்கொள்ளும் பொருட்டே.
Friday, September 16, 2011
Thursday, September 8, 2011
பிறந்தநாளில் சபதம் எடுத்த பேக்கு..
ஒரு மனுஷனுக்கு வருசத்துல ஆயிரம் நல்லநாள் பெருநாள் வரும். ஒவ்வொன்னா சொல்லப்போனா புதுவருசம் (அதுலயும் தமிழ், இங்கிலீசு, சிங்களம் எண்டு), தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் (நம்ம போன்றாக்களுக்கு), தீபாவளி, பெரிய வெள்ளி, கிறிஸ்துமஸ், ரம்ழான், ஆடி பொறப்பு எண்டு ஆயிரம்.. ஆனா இது எல்லாத்துலயும் கொஞ்சம் பெரிய பொறப்புதான்
Friday, June 17, 2011
கடவுள் இல்லை நீ கல்லிலான கயவன்..
கல்லினில் இரு துளைவைத்து
கண்ணென்று சொல்லி உலகையும்
காப்பான் இவன், தன் கண் கொண்டு என
கற்பனை வளர்த்த எமை மூடராய் ஆக்கி
கயவனாய் போனாயே - கடவுள் இலை நீ
கல் என்றே சொல்வேன் உனை..
Sunday, June 5, 2011
விபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)
எனக்கு உண்மையில் அந்த நாட்கள் மறந்துதான் போயிருந்தது. சொல்லப்போனால் இந்த இரண்டு வருடங்களில் அந்த ஞாபகம் வந்ததே இல்லை. நிம்மதியாய்த்தான் இருந்தேன். ஆனால் இன்று மீண்டும் அழைப்பு ஒரு நண்பனிடமிருந்து. இரவு ஒரு பார்டி இருக்குது வாடா என்றான் தொலைபேசி வாயிலாக. பார்டி என்றால் பலதும் பத்தும் இருக்கும் இருந்தாலும் நல்ல சாப்பாடு இருக்குமே என்பதால் அவனுடன் சென்றேன். அங்குதான் மீண்டும் அவளை சந்திக்க நேர்ந்தது. என்னால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை அவள்தானோ என்று. பெயர்கூட மறந்திருந்தது. ஒருவேளை இது அவள் சகோதரியாய் கூட இருந்திருக்கலாம். இருந்தும் அந்த கட்டுடல் , அதே கலர் சொன்னது இது அவளேதான்...
Thursday, June 2, 2011
மனம் போல் வாழ்க்கை. வீரியமா? விபரீதமா?
ரொம்ப நாளாவே எனக்கொரு கடமை பாக்கியிருந்துச்சு.. அத எப்டியாவது நிறைவேத்திடனும் நிறைவேத்திடனும்னு பாத்திட்டிருந்தன் இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சுது.. சிலபல நாட்களுக்கு முதல்ல (சுமார் ஆறு மாசம் தாங்க) என்னைய ஜனா அண்ணா கேட்டிருந்தார் 'டேய் அஷ்வின் தம்பி நீ 'மனம் போல் வாழ்வு ' என்ற தலைப்புல ஒரு பதிவு போடுடா எண்டு. சரி நானும் போடுவம் போடுவம் எண்டு வந்தா மனசும் உடம்பும் கொஞ்சம் இடம் கொடுக்கல. சரி இண்டைக்காவது போட்டிடுவம் எண்டு வந்துட்டன்.
Wednesday, March 9, 2011
ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்.
ஆளாளுக்கு பெண்விடுதலை புரட்சிப்பெண் புதுமைப்பெண் எண்டு எழுதுறாங்க.. பொண்ணுங்களுக்கு சுதந்திரம் கிடைச்சு ரொம்ப நாளாச்சுங்க. என்றைக்கு ஒரு பொண்ணு தான் சுதந்திரமா ஆடை உடுத்த ஆரம்பித்தாளோ அன்றே அவளுக்கு சுதந்திரம் இருநூருமடங்க கிடைச்சாச்சு. அத நல்ல வழில பயன்படுத்துறதும் தாராள மனப்பான்மையோட பயன்படுத்துறதும் அவங்க கையுலதான் இருக்கு. இந்த நூற்றாண்டுல பேச வேண்டிய மாட்டார் ஆன விடுதலை. ஸோ யாராச்சும் ஆண் விடுதலையபத்தியும் எழுதுங்கவன்..
இந்த ஒலகத்துல ஆண்களுக்கு சுதந்திரமே இல்லைங்க. பொறந்ததில இருந்து
Monday, February 28, 2011
சும்மா இருக்குறதெண்டா சும்மாவா?
மனுஷனுக்கு ஆயிரம் ஆசை .. அதுல நமக்கு இருந்த ஆசை ஒருதடவையாவது சும்மா இருக்கணும்.. (சும்மான்னா அந்த சும்மா இல்லைய்யா) அப்புடி என்ன பெரிய கஷ்டமா ? எண்டு கேக்குற மத்தவங்கள போலதான் இருந்தான் இண்டைக்கு காலைவரை.. இப்பதான்யா புரியுது சும்மா இருக்குறதுல எம்புட்டு பெரிய சூட்சுமம் இருக்கெண்டு..யாராச்சும் கேளுங்களேன் என்ன நடந்துச்சு எண்டு.. கேளுங்களேன்..
Wednesday, December 1, 2010
சுமையோடு சுமையாக...
சுழன்றுகொண்டிருக்கும் காலமே
என் சிந்தனைக்காக நிறுத்திக்கொள்
கொஞ்சம் உன் ஓட்டத்தை
இல்லையேல் சிந்தனை முடிகையில்
ஓடியிருப்பாய் ஓராயிரம் நொடிகள்
Wednesday, November 17, 2010
விண்ணில் வீழ்ந்தவன் சதை புது விதையென மறவோம்
மண்ணில் புதைத்தோர் மார்க்கம் மனதில் விதைத்தோம்
விண்ணில் வீழ்ந்தவன் சதை புது விதையென மறவோம்
Saturday, October 16, 2010
சீனியோரிட்டியின் பச்சைப்பக்கங்கள்..
பல மைல் தூரத்தில் இருந்து பல மைற்கற்களை கடந்து பல்கலை கழகம் என்ற புரையோடிய கனவுகளுடன் சாதிக்க துடிக்கும் விழிகளாய் தடம் பதிக்கும் இளரத்தங்களின் துடிப்புகள் மறுக்கப்பட்ட கதை, இது பல்கலை தந்த கதை
பல்கலை நுழைவாயிலில் நாடி நிற்கையிலே பல கனவுகள், பாடசாலை அடித்தளமிட்ட களங்களின் விஸ்தீரமான கேந்திரமாக பல்கலை கழகம் எம் எதிர் பார்ப்பில்.....
பள்ளி சிட்டுக்களாய் வயதுகளின் பரிணாம வளர்ச்சியிலே
Thursday, September 30, 2010
உளறல்
பெண்மையின் அர்த்தம் மென்மைதானே
பெண்மையின் அர்த்தம் மென்மைதானே
மெல்லிய மலரும் ஆர்ப்பரிக்கா சிறு நதியும்
தண்ணிய தென்றலும் தாழையின் வழுவலும்
தூரத்து நிலவும் துயரில்லா தோகை
Tuesday, September 21, 2010
Saturday, August 28, 2010
நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!
நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!
நக்கலும் நளினமுமல்ல
நாள் நடப்புச்சொல்கின்றேன்
நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!
முட்கம்பி வேலிகளில்
ஊஞ்சலிடும் முல்லைகள்
ரிப்பன்களோடு சேர்ந்து
நெய்துவிட்ட தாவணியோடு
சில்வண்டு இரையும்
நக்கலும் நளினமுமல்ல
நாள் நடப்புச்சொல்கின்றேன்
நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!
முட்கம்பி வேலிகளில்
ஊஞ்சலிடும் முல்லைகள்
ரிப்பன்களோடு சேர்ந்து
நெய்துவிட்ட தாவணியோடு
சில்வண்டு இரையும்
Monday, May 17, 2010
தொடர்கதை.. நம் வாழ்க்கை.

தனிமையில் நடந்து செல்கிறேன் கூட்டத்தில் ஒருவனாய் காலிவீதியில். தெருவிளக்குகள் என்னைப்பார்த்து பல்லிளிக்க இரவின் நிஷப்த்தத்தை தேடும் கண்களில் பட்டதென்னவோ அடுக்குமாடிக்கட்டடங்களும் ஆர்ப்பரிக்கும் மக்களும். இன்று அக்ஷயத்திருதியை வேறு பொன் சேர்க்ககூடிவிட்டார் பலர். நடந்தபாதை எங்கும் முட்டியது தமிழ் மூச்சுக்கள்தான். மூச்சோடு மூர்ச்சிரைத்து அடங்கிவிட்டிருந்ததது என்மூச்சு. மகிழ்ச்சிக்கு குறைவில்லை போலும், இன்றும் கூட்டம் கூட்டமாய் வெட்டிப்பேச்சு வாயினில், வெள்ளைப்பூச்சு நெற்றியில்.
வீதியோரத்தில் கரையொதுங்கிய பேருந்துகள் கடுகதிப்பயனத்துக்காய் தயார்நிலையில், நெடுதூரப்பயணம் இன்றுவரை நெருக்குவாரப்பயணம், உறங்கிய யாழ்தேவிக்காய் விழித்துக்கொண்ட தற்காலிக/நிரந்தர முகவர்கள் இந்த பேரூந்துகள். அவை சுற்றி ஆருடம் பேசும் அசகாயர்கள் சிலரும் ஆரியம் பேசும் வீரியர் பலரும். இவர்களில் ஒருவர் உள்நாட்டு அகதிகள் மற்றவர் உள்நாட்டு உல்லாசப்பயணிகள். ஏறெடுத்துப்பார்க்கிறார் என்னையும் ஏதோ எதிர் நாட்டார் போல. அத்துணையும் மனசுக்கு பழகிப்போன ஒன்று.. இன்று நேற்றல்லவே இக்கதை..
Wednesday, January 20, 2010
அரசியல் செய்துபார்.!
கவிதைய மெனக்கட்டு வாசிக்க அலுப்பா இருந்தா ஒலிவடிவத்த கேக்க இங்க கிளிக் பண்ணுங்கோ..
உன்னை சுற்றி தொண்டர்கள் கூடும்
தோட்டாக்கள் தேடும்
செல்வாக்கின் அர்த்தம் புரியும்
சொல்வாக்கு மலிந்து போகும்
உனக்கும் தத்துவம் வரும்
ஒலிபெருக்கிகள் அதறக்கேட்டும்
ஒடுக்கமாட்டாய் உன் பேச்சை
Sunday, December 20, 2009
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கமலா..
இருண்ட அறைக்குள்ள விட்டில் பூச்சியோட கதைபேசிகொண்டு கமலா
என்னவோ ஏக்கம் கமலான்ர மனசுக்குள்ள
பான்கூட போடல முகமெல்லாம் வியர்வை முட்டி மோதிட்டு இருந்துச்சு
ஏன் என்டுகேக்குறமாதிரியே சின்னவன் மழலை மொழிபேச மெல்லமா தட்டிகொடுத்துகொண்டிருந்தாள்
மெல்லமா கண்ணயர்ந்திட்டான் போல தூக்கிட்டுபோய் தொட்டில்லகிடத்தி ஆட்டிவிட்டு வந்திருந்தாள்
இடையில ஏதோ நினைப்பு திடுக்கிட்டு எழும்பி அலுமாரிய தொறந்தாள் நேத்துதான் ஆபீசால வரெய்க சர்ச்சுக்கு முன்னால பய்மேண்டுகடையில நைற்றி ஒன்டுவாங்கினவள் அளவோ எண்டுகூட பாக்கேல எடுத்துமாட்டிக்கொண்டாள்
கட்டில் சீலைய கொஞ்சம் சரிப்பண்ணிவிட்டுடு சுவர்கறையா தலைய வச்சு
Monday, December 14, 2009
சுடும் என நினை மறவா.
தலைமுறை ஒன்று ஓடிச்சென்றது
விதிமுறை பல மாற்றிச்சென்றது.
நம் ஓசை ஓங்கி ஒலித்தபோது
இசைபாடி அசைபோட்ட பலரிங்கு
வசைபாடி நசை பேசுகின்றார் -தசைகள் துடிக்கிறதே
வீழ்பவன் இவன் என்றுலகும் கதை சொல்கிறதே- பதில் சொல்லிடுவோம்
மனைகள் கொண்ட கணைகள்
வினைகள் செய்ததன் வினைகள்
சுற்றும் உலகு நிற்கும் முன்னர்
சுடும் என நினை மறவா
Tuesday, October 13, 2009
தலைப்பிடவில்லை தலையை பாதுகாத்துக்கொள்ள...
கண்ணீருடன் காத்திருக்கும்.......
என் செய்வேன் பராபரமே!
Subscribe to:
Posts (Atom)











