• Friday, June 10, 2011

    ஜெயிலில் இருந்து ராசா எழுதிய கடிதம்(கவிதை)

    2G ராசா என்று எல்லோராலும் அறியப்பட்ட ஆ.ராசா ஜெயிலில்இருந்தவாறு கவிதை ஒன்று எழுதியுள்ளார். இதில் பல மர்மங்கள், தடயங்கள் இருக்கும் என ஐயப்பட்டு சி.பி.ஐ அதிகாரிகள் அக்கவிதையை ஐந்துகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள். இருந்தும் சி.பி.ஐ. ல் வேலை பார்க்கும் எனது நண்பன் ஒருவனின் உதவியுடன் அக்கவிதை முதன் முதலாக உங்களுக்கு தருகிறேன்..


    கவிதைய வாசிக்க முதல்ல எல்லாரும் ஒருக்கா கண்ணமூடி பாட்ஷா படத்துல ''நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்'' பாட்ட நெனச்சு அந்த சந்தத்துல கவிதைய படியுங்கையா. அப்போதான் பாவம் ராசாவோட பீலிங்கு புரியும்.  பேசாம இந்தாங்கோ ஆட்டோகாரன் பாட்டு இத பாத்திடு கவிதைய படியுங்கோ.




    கவிஞர் ஆ.ராசா.
    கககக கவிதை:

    நான் 2G ராசா 2G ராசா
    கோடி அடிச்ச துட்டுகாரன்
    நியாயமுள்ள ஊழல்காரன்
    கனிமொழியின் கூட்டுகாரன்
    நீலகிரி தொகுதிகாரன்
    கலைஞர் பொறந்த நாட்டுக்காரன்
    பதவி கிடைச்சா கொள்ளைக்காரன்
    முள்ளமாரிங்க உறவுக்காரன்
    பாவப்பட்ட மனசுக்காரண்டா
    நான் ஊழல் செய்யும் ஆளுக்கெல்லாம் சொந்தக்காரண்டா.
    நான் எப்பொழுதும் ஊழல் செய்யும் ஆளுக்கெல்லாம் சொந்தக்காரண்டா.

    ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
    ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
    நான் 
    2G ராசா 2G ராசா 
    கோடி அடிச்ச துட்டுகாரன்
    நியாயமுள்ள ஊழல்காரன்டா.................
    நான் நியாயமுள்ள ஊழல்காரன்டா......

    குடும்பம் பெரிசாச்சு
    ஆசை டபுளாச்சு
    லட்சத்தில் லஞ்சம் வாங்கி இமேஜ்
    பாழாச்சு
    வாழ்க்கை பரபரக்கும் நேரத்துல அடிச்சோம் லட்சம் கோடியில
    அட ஊழல் செஞ்சும் வாழலாம்னு சொன்னாங்க
    புடிபட்டா கழி துண்ணனும்னு சொல்றேங்க..
    அட ஊழல் செஞ்சும் வாழலாம்னு சொன்னாங்க
    புடிபட்டா கழி துண்ணனும்னு சொல்றேங்க..

    அவையும் வருவினம் பாரு இனி சும்மா விடாது ஊரு
    சீக்கிரம் வரும் மாறன் மார்க்கு ஜெயிலுல சீட் போட்டு வையு.
    இரக்கமுள்ள மனசுக்காரண்டா கலைஞர்
    அம்மாக்கெல்லாம் கடிதம் எழுதுறாருடா.
    அவர் சும்மா சும்மா கடிதம் எழுதுறாருடா.
    ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
    ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
    நான் 2G ராசா நான் 
    2G ராசா
    கோடி அடிச்ச துட்டுகாரன்
    நியாயமுள்ள ஊழல்காரன்......
    அம்மா சோனியாம்மா ஆபத்தில் விட்டுடாத
    வெயிலோ புயல் அடியோ உன்பேர சொல்லமாட்டேன்.
    அங்கங்கே பசியெடுத்தா சிலகோடி
    ஐயா குடும்பத்துக்கு பசிஎடுத்ததால ஆயிரம்கோடி
    நான் வாங்கினது எவ்வளவ்னு கேக்குறாங்கைய்யா..
    உன் பிள்ளைங்க பிடுங்கினது அவங்களுக்கு தெரியுமாய்யா?
    எழுத்தில்லாத ஆளும் எங்கள பத்தி எழுதுறான்
    உங்க அட்ரெஸ் இல்லாம பண்ண அங்க அம்மாகூடதுடிக்குறா..
    நாம இரக்கமுள்ள மனசுக்காறங்கைய்யா. ஏன்னா
    எவ்வளவு அடிச்சாலும் தாங்குறோமைய்யா...

    ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
    நான் 
    2G ராசா 2G ராசா
    கோடி அடிச்ச துட்டுகாரன்
    நியாயமுள்ள ஊழல்காரன்யா......

    நான் நியாயமுள்ள ஊழல்காரன்யா......
    கோரஸில் எல்லோரும் '' நாம நியாயமுள்ள ஊழல்காரங்கய்யா......''
    *********************************************************************

    வேணாம் நீங்க எடுத்த முடிவு தப்பானது. ஒரு அப்பாவிய இத்தன பேர் சேர்ந்து அடிக்கக்கூடாது. அப்படி என்ன அடிக்கணும்னு தோனினால் அத ஓட்டாவும் கமென்டாவும் போடுங்க நான் அட்ஜஸ்ட் பண்ணிகிறன். ஹி ஹி.

    முக்கியமான மாட்டர்: நீங்கள் இலங்கை தமிழ்ப் பதிவர் குழுமத்தில் இணைந்துகொள்ள இங்கே செல்லுங்கள். இலங்கை வலைப்பதிவர் சந்திப்பிற்கான முன்னேற்பாடாகவே இந்த அழைப்பு.

    Post Comment

    28 comments:

    Vathees Varunan said...

    ஆஹா அருமை

    கவிதை வீதி... // சௌந்தர் // said...

    அசத்தல்...

    கவிதை வீதி... // சௌந்தர் // said...

    டைமிங் அன்டு ரைமிங்....

    Jawid Raiz said...

    :)

    Jana said...

    கலக்கிறீங்க அஷ்வின் :)
    கவிதை தூள் :)

    Mohamed Faaique said...

    கும்மியிருக்கீங்க பாஸ்...

    Anonymous said...

    ஹஹஹா வரிகள் + டைமிங் அசத்தலாய் வந்திருக்கு பாஸ் ..)

    anuthinan said...

    ராசா நீ ராசாவுக்கே ராசா ராசா!!!! உனக்கும் உள்ள போக ஆசையா ராசா!!!

    maruthamooran said...

    ஒரு நாயகன் உதயமாகிறான்............. மாதிரி ஒரு கவிஞன் உருவாகிறான் என்று வைத்துக்கொள்கிறேன்.

    கவிஞர் திலகம் அஸ்வின் வாழ்க!

    chockalingam said...

    wonderful song

    Admin said...

    அசத்தல்... கவிஞருக்கு வாழ்த்துக்கள்

    சி.பி.செந்தில்குமார் said...

    haa haa haa sema

    நிரூபன் said...

    ஜெயிலில் இருந்து ராசா எழுதிய கடிதம்(கவிதை)//

    அடடே..
    தலைப்பே சூப்பரா இருக்கே..
    கற்பனைக் குதிரையைத் திஹார் ஜெயில் பக்கம் தட்டி விட்டிருக்கிறீங்க, இருங்க முழுவதையும் படித்து விட்டு வாறேன்.

    நிரூபன் said...

    2G ராசா என்று எல்லோராலும் அறியப்பட்ட ஆ.ராசா ஜெயிலில்இருந்தவாறு கவிதை ஒன்று எழுதியுள்ளார். இதில் பல மர்மங்கள், தடயங்கள் இருக்கும் என ஐயப்பட்டு சி.பி.ஐ அதிகாரிகள் அக்கவிதையை ஐந்துகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள்//

    என்ன கவிதைக்குள்ளும் காசை மறைக்கிறீங்களா.

    நிரூபன் said...

    என்ன ஒரு கொலை வெறி,
    ராசாவை அப்பளமா இல்லே பொரிச்சிருக்கீங்க.

    Ashwin-WIN said...

    வதீஸ்-Vathees said...
    *ஆஹா அருமை*
    நன்றி நன்றி வருகைக்கு

    # கவிதை வீதி # சௌந்தர் said...
    *அசத்தல்..டைமிங் அன்டு ரைமிங்...*
    எல்லா புகழும் ராசாவுக்கே.

    Ashwin-WIN said...

    @Jana
    //கலக்கிறீங்க அஷ்வின் :)
    கவிதை தூள் :)//
    நன்றின்னா.. தூள எண்டா மிளகாய் தூளா இல்ல மஞ்சள் தூளா???

    Ashwin-WIN said...

    @Mohamed Faaique
    //கும்மியிருக்கீங்க பாஸ்.// நன்றி பாஸ்

    Ashwin-WIN said...

    @கந்தசாமி.
    //ஹஹஹா வரிகள் + டைமிங் அசத்தலாய் வந்திருக்கு பாஸ் ..)//
    எல்லாப் புகழும் ராசாவுக்கே..

    Ashwin-WIN said...

    @Anuthinan S
    //ராசா நீ ராசாவுக்கே ராசா ராசா!!!! உனக்கும் உள்ள போக ஆசையா ராசா!!//
    இப்போ எல்லாம் வெளில இருக்குரதவிட உள்ளதான் செம ஜாலியாம்.

    Ashwin-WIN said...

    @மருதமூரான்.
    //ஒரு நாயகன் உதயமாகிறான்............. மாதிரி ஒரு கவிஞன் உருவாகிறான் என்று வைத்துக்கொள்கிறேன்.
    கவிஞர் திலகம் அஸ்வின் வாழ்க//
    ஐயய்யோ என்னைய ரொம்ப புகழுராங்களே/ ஓட்டுராங்களே.. புரட்சித்திலகம் மிஸ்டர் மருது வாழ்க.

    Ashwin-WIN said...

    @சந்ரு
    //அசத்தல்... கவிஞருக்கு வாழ்த்துக்கள்//
    ஹா ஹா உல்டா பன்னுறவன் தான இப்போ கவிஞன். இது தெரியாம இவ்வளவுனாலும் வேல்லோந்தியா இருந்திட்டியே அஷ்வின்

    Ashwin-WIN said...

    @சி.பி.செந்தில்குமார்
    //haa haa haa sema//
    நன்றி சி.பி வருகைக்கு...

    Ashwin-WIN said...

    @நிரூபன்
    //அடடே..
    தலைப்பே சூப்பரா இருக்கே..
    கற்பனைக் குதிரையைத் திஹார் ஜெயில் பக்கம் தட்டி விட்டிருக்கிறீங்க, இருங்க முழுவதையும் படித்து விட்டு வாறேன்//
    வாங்க வாங்க மாப்பு..

    Ashwin-WIN said...

    @நிரூபன்
    //என்ன ஒரு கொலை வெறி,
    ராசாவை அப்பளமா இல்லே பொரிச்சிருக்கீங்க//
    ஹி ஹி ஹி
    ஆளாளுக்கு பொரிக்கிறாங்க அப்புறம் நான் பொரிக்களைன்னா பாவம் ராசா தப்பா நெனச்சுடும் அதான்.

    Avargal Unmaigal said...

    நல்ல நகைச்சுவை . உங்கள் பதிவை படித்த அனைவரையும் பாட வைத்த முயற்சி நல்ல முயற்சி நண்பரே. வீட்டில் யாரும் இல்லாத போது நான் பாடி பார்த்தேன்

    கிருஷ்ண மூர்த்தி S said...

    நல்ல கற்பனை!

    ராசாகூட, தன்னுடைய தலைவர் மாதிரி உளியின் ஓசை, பெண் சிங்கம் மாதிரி அலுப்பூட்டும் கதைவசனம் எழுத ஆரம்பிக்காமல், கொஞ்சம் ஜாலியாக பாட்டுப் படித்த மாதிரி...!

    ஊழல் முதலில் நியாயமாக வாங்கின காசுக்கு உண்மையாக இருப்பது போலத்தான் ஆரம்பிக்கும்!

    லட்சம் கோடிகளில் சம்பாதிக்க வேண்டுமென்றால், நியாயமுள்ள ஊழல்காரனாக இருந்தால் முடியாது! ஆ. ராசா தன்னுடைய தலைவரிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம் இது!

    cheena (சீனா) said...

    ஆகா ஆகா - பாட்டு சூப்பர் ( பாட்டுக்கும் கவிதைக்கும் என்னா வித்தியாசம் ) - ரசிச்சேன் - நட்புடன் சீனா

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner