காதல் மாதம் பொறந்தவுடனையே வலைப்பக்கங்கள்ள கவிதை கொட்ட ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முதல் மையிட்டு தொடக்கியுள்ளார்கள் நம்ம காதல் காதல் இளவரசர்கள் நிரூஜா மாமா மற்றும் சுபாங்கன் மாமா.
நாமளும் எழுதி சூட்டோட சூடா போடுவம் எண்டா அது வருதில்ல. சோ அய்யாக்கு காதல் மூட் வரும் போது எழுதி போடுறன். அதுவரைக்கும் நாம சும்மா இருக்கேலாம கை + வாய் நம நம எண்டுச்சு.. அதோட விளைவா நம்ம சுபாங்கன் மாமாவோட கவிதைக்கு ஒலிவடிவம் கொடுத்திருக்கேன்.. (இன்னும் அவரிடம் உரிமம் பெறப்படவில்லை.)
கேளுங்க கேட்டு பாத்திட்டு ''அநியாயமா ஒரு கவிதையே நாசமாக்கிட்டியேன்னு'' மட்டும் திட்டிடாதீங்க... ஐயாம் பாவம்.