• Wednesday, August 19, 2009

    பெண்ணே நீயும் நிலவோ..!



    பெண்ணே நீயும் நிலவோ

    பெயர் சொல்ல முடியா கனவோ
    இதயம் துடிக்கும் கணத்தில்.........
    உன் நினைவுகள் வந்து மறையும்
    சிறு நட்சத்திரம் ஒரு தேன் நிலவு
    மெல்லப்பாடிவரும் மென் இசைக்காற்று
    செல்லத்தலையசைக்கும் அழகு அல்லி மலர்
    இவை யாவும் யாவும் நீயோ
    உன்னை காணத்துடிக்கும் இரவும் நான்தானோ..!
    ஏய் அழகு நிலா..!
    எனை மயக்கும் நிலா..!
    ஏணி வைத்து ஏறி உன் அழகை ரசிக்கப்போறேன்
    அங்கம் எங்கும் தங்க சிறு

    ஒரு பேதையின் கனவு..


    ஏ.. பசுங்கிளியே..!
    செல்லக்காதலனோடு
    கொஞ்சிக்கதை பேசுகிறாயா..?
    உனைப்பார்க்கையில் கண்களில் நீர்துளிர
    எனக்கும் காதலிக்க ஆசை கிளியே.
    கண்கவரும் கொள்ளை அழகு

    வாரணம் ஆயிரம் கொண்டான்





    கவிஞனின் கவிஞன் நீ 
    கலைத்தாயின் கடைக்குட்டி

    கறைபடியா வர்ணமேகிய 
    புரையோடும் தமிழன் நீ
    தென்றலில் தேனெடுத்து 
    அன்றிலில் அமுதாக்கிய அழகன் நீ
    மன்றமும் மாநாடும் நாடும் 
    கவியோடும் கலைக்கடல் நீ
    மழலையின் தாயமுதும்

    காதலித்துப்பார் கொஞ்சம்...


    காதல் என்பது கனவுகளின் தொகுப்பு.. 
    காவியங்களின் தலைப்பு..
    கண்களில் பூவாகி உள்ளத்தில் காயாகி 
    கனவுகளில் கனியாகும் தேன்கனி.
    உள்ளங்கள் இடம்மாறி உயிருக்குள் 
    ஊடுருவும் உன்னத உணர்வு.
    உயிர் இருப்பதை உணர வைக்கும் 
    ஊடல்களின் இருப்பிடம்-காதல்

    கண்களை மூடிப்பார்..
    நினைவுகள் கோர்த்துப்பார்..
    உள்ளங்கள் தேடிப்பார்..
    உணர்வுகளை உருக்கிப்பார்..
    நெஞ்ஞங்கள் துளைக்க 
    நெருடல்கள் வருட..
    காதலித்துப்பார் கொஞ்சம்.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner