• Tuesday, June 26, 2012

    காவியா - கனவுகளோடு (பாகம் 1)


    காதல் வானம் 
    கனவுகளின் கோட்டை மீது 
    கம்பீரமாய் சிரிக்கிறது.. -இதில் 
    பறந்துவிட துடிக்குது
    ஆயிரம் பறவைகள்
    நீயும் வா.. நிரந்தர குடியுரிமைக்கு 
    விண்ணப்பிப்பதாய் இருந்தால்..
    காதலித்து வா.. 
    கணம் கணம் காதலித்து வா..

    ம்ம் இந்த கவிதை மாதிரியே என்னோட காதலும் யாரும் கவனிக்கபடாமலே போயிட்டு. காவ்யா.... காவ்யா.. இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம்ல. உன் வீட்டு வாசலில நிக்குறன் தனியா. வீடே கோலாகலமா இருக்கு. புதுசு புதுசா சொந்தங்கள் எல்லாம் வந்திருக்காங்க.. நீ இப்போ உன்னோட புது வாழ்க்கைக்கு அலங்காரம் பண்ணிட்டிருப்பாய்ல. உனக்கெல்லாம் என் ஞாபகம் இருக்குமா ?? என்னைப்பார்த்தா என்ன சொல்லுவாய்..அதான் உனக்கு அழைப்பிதழே கொடுக்கலையே ஏண்டா வந்தாய்ன்னு  உன் கண்ணாலேயே கேள்விகேட்டு கொலை பண்ணிடமாட்டாயா.. 

    Tuesday, June 5, 2012

    உன்னோடு நான் கொண்ட உறவு (14+)


    என்ன பிழை செய்தேன் ஏன்
    இன்று என்னை தவிக்கவிடுகிறாய்
    உண்ணவும் மறுத்திருப்பேன்
    உடுக்கவும் மறுத்திருப்பேன்
    உன்னை அணைக்க மறுத்தேனா?

    Thursday, February 2, 2012

    காதல் மாதம் - ஸ்டாட் மியூசிக்..

    காதல் மாதம் பொறந்தவுடனையே வலைப்பக்கங்கள்ள கவிதை கொட்ட ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முதல் மையிட்டு தொடக்கியுள்ளார்கள் நம்ம காதல் காதல் இளவரசர்கள் நிரூஜா மாமா மற்றும் சுபாங்கன் மாமா. 

    நாமளும் எழுதி சூட்டோட சூடா போடுவம் எண்டா அது வருதில்ல. சோ அய்யாக்கு காதல் மூட் வரும் போது எழுதி போடுறன். அதுவரைக்கும் நாம சும்மா இருக்கேலாம கை + வாய் நம நம எண்டுச்சு.. அதோட விளைவா நம்ம சுபாங்கன் மாமாவோட கவிதைக்கு ஒலிவடிவம் கொடுத்திருக்கேன்.. (இன்னும் அவரிடம் உரிமம் பெறப்படவில்லை.) 
    கேளுங்க கேட்டு பாத்திட்டு ''அநியாயமா ஒரு கவிதையே நாசமாக்கிட்டியேன்னு'' மட்டும் திட்டிடாதீங்க... ஐயாம் பாவம்.

    Saturday, January 7, 2012

    ஏன் அத்தனையும் என்னைதேடுது? - பௌதீகக்காதல்


    ஏ சுட்டிப்பெண்ணே ஏன்
    எல்லாம் என்மேல் பாயவிட்டாய்
    புது சாயம் பூசி காதல் என்கிறாய்..

    என் வெப்பம் குறைந்து போனதோ - ஏன்
    என்னில் பாயுது உன் கண்ணின் கதிர்வீச்சு.
    என் அமுக்கம் தாழ்ந்து போனதோ - ஏன்
    என்னில் பாயுது உன் மூச்சின் காற்று.
    என் செறிவும் குறைந்து போனதோ- ஏன்
    என்னில் பரவுது உந்தன் வாசனை ?

    என் ஈர்ப்பழுத்தமும் வீழ்ந்ததோ !
    உன் கூந்தல் பூ என்னை நாடுதே.
    மின்அழுத்தம் குறைந்து போனேனா - ஏன்
    என்னில் பாயுது உன் காதல் மின்சாரம்.
    அட எல்லாம் குறைந்தும் ஏனோ என்னில்
    இன்னொரு உயிரின் எடைஏற்றம் ???

    உன்னால் என் பௌதீகம் இன்று
    இஸ்லாம் கொண்ட பாரசீகம் ஆனதே..


    குட்டி கவிதை = குட்டி கசங்கல்= குட்டி கந்தல் என்னமோ எதோ நம்ம வேலை முடிஞ்சு.....

    டிஸ்கி- ஏழாம் நூற்றாண்டில் பாரசீகம் (இன்றைய ஈரான்) மீதான அரேபிய நாடுகளின் படையெடுப்பால் பாரசீகம் அழிந்து அங்கு இஸ்லாம் குடிகொண்டது.
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner