காதல் வானம்
கனவுகளின் கோட்டை மீது
கம்பீரமாய் சிரிக்கிறது.. -இதில்
பறந்துவிட துடிக்குது
ஆயிரம் பறவைகள்
நீயும் வா.. நிரந்தர குடியுரிமைக்கு
விண்ணப்பிப்பதாய் இருந்தால்..
காதலித்து வா..
கணம் கணம் காதலித்து வா..
ம்ம் இந்த கவிதை மாதிரியே என்னோட காதலும் யாரும் கவனிக்கபடாமலே போயிட்டு. காவ்யா.... காவ்யா.. இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம்ல. உன் வீட்டு வாசலில நிக்குறன் தனியா. வீடே கோலாகலமா இருக்கு. புதுசு புதுசா சொந்தங்கள் எல்லாம் வந்திருக்காங்க.. நீ இப்போ உன்னோட புது வாழ்க்கைக்கு அலங்காரம் பண்ணிட்டிருப்பாய்ல. உனக்கெல்லாம் என் ஞாபகம் இருக்குமா ?? என்னைப்பார்த்தா என்ன சொல்லுவாய்..அதான் உனக்கு அழைப்பிதழே கொடுக்கலையே ஏண்டா வந்தாய்ன்னு உன் கண்ணாலேயே கேள்விகேட்டு கொலை பண்ணிடமாட்டாயா..