நவீனத்துவம் பெற்ற மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்றாக இன்று மாறியிருக்கிறது ஆபாசம் என்ற பதம். உண்மையில் ஆபாசம் என்பது என்னவென்று சொல்வதானால், மனித பாலுணர்வுகளை கிளர்ந்தெழ செய்கின்ற காட்சிகள், வார்த்தைகள், சிற்பங்கள் என்பவற்றையே சொல்லமுடியும். ஆக இப்படிப்பட்ட ஆபாசத்தின் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது ஏதோ ஒருவிதத்தில் மனிதனை மயங்கச்செய்த்து தங்களுடைய சுய லாபங்களை தீர்த்துக்கொள்ளும் பொருட்டே.