• Wednesday, October 21, 2009

    உன்னைச்சரண் அடைவேன்.


    கண்கள் ஒருகதை சொல்ல
    கன்னம் பலரகம் கொள்ள
    நெஞ்சம் நீதான் வேண்டும் என்றதே
    கொஞ்சம் எனைக்கண்டு நீ செல்லடி
    உன் ஓரப்பார்வை விழியில்தான்
    என் இதயம் துடிக்குது அன்பே
    நேரே உன்னை கண்டால் போதும்
    ஜூன்மாதம்கூட குளிரும்.
    உந்தன் இரவில்
    நான் பக்கம் வேண்டாம்
    உன் படுக்கை அறையின்
    ஜன்னல் ஓரத்தில்
    காற்றின் வேகத்தில்
    மெல்ல அசையும்
    இலையின் மறைவில் நிலவாய் உன்னை ரசிக்க வேண்டும்

    Tuesday, October 20, 2009

    எப்படி சொல்லப்போகிறாய்..?


    நீ என் அருகில் இருந்தால்
    உன்கண்கள் காட்டிக்கொடுத்திருக்கும்
    நீ காதலிப்பதை
    நீ என்னோடு கதைத்திருந்தால்
    உன் குரலில் நளினம் சொல்லியிருக்கும்
    நீ காதலிப்பதை
    நீ என்னோடு கடிதத்திலாவது உறவாடியிருந்தால்

    Wednesday, October 14, 2009

    உனக்காக...


    உதிரத்தில்
    ஊறிய
    உன்னை
    உதிரத்தில்
    உறைந்துவிட்ட
    உன் நினைவை
    உதிரத்தில்
    உதிர்ந்த
    உன் காதலை
    உயிருள்ளவரை
    உளறும் - இந்த

    Tuesday, October 13, 2009

    தலைப்பிடவில்லை தலையை பாதுகாத்துக்கொள்ள...



    பெண்களில் நோக பெரியவன் நானும்மில்லை
    பட்டதும் நானில்லை
    பட்டினத்தார் வம்சமும் சேரவில்லை
    சுட்டதும் என்னையல்ல
    குணம் பல காட்டி எனையாரும் மருட்டவும் இல்லை

    கண்ணீருடன் காத்திருக்கும்.......


    பணியாரம் வச்சுருக்கன்
    வாங்கமச்சான் ருசி பார்க்க
    கலர் கலரா பார்த்த உனக்கு
    நான் கூட கசக்குறேனா?
    கம்மாயில தண்ணி பாயுது
    தனிப்புல்லு தண்ணி தேடுது
    கவிழ்ந்த மனம் விழுந்த இடத்தில்
    மகிழவைக்குரன் வாங்க மச்சான்

    என் செய்வேன் பராபரமே!


    பிறக்கும் போதே தோளில் சுமைகள்
    சோதனை நிறைந்த வாழ்க்கையடா!
    இன்பமும் இன்னலும் இடையிடையே,
    இணைந்து கலந்த வாழ்க்கையடா!
    கடமையும் கடனும் கட்டவிழ்ந்ததால்,
    என் சுதந்திரம் இங்கு தொலையுதடா!
    கனவுகள் எல்லாம் கரைபுரண்டதால்
    வயதுகள் இங்கு முன்னே

    ஆராரோ ஆரிரரோ கண்மணியே கண்ணுறங்கு

    ஆராரோ ஆரிரரோ
    கண்மணியே கண்ணுறங்கு
    அன்னையவள் கண்முன்னே
    கண்ணுறங்கு கண்மணியே
    தாயழுது.. நானழுது.. ஊரழுது.. உறவழுது..
    நாய்கூட இரங்கவில்லை சேயழுது இரங்கிடுமோ செல்வமகனே!
    கண்ணுண்டு கருணையில்லை
    பெண்ணுண்டு தாய்மையில்லை
    உறவொன்று அங்கு உண்டு
    உதவிஎன்று ஒன்றுமில்லை

    Monday, October 12, 2009

    காதல்தானே செய்தேன்..!


    ஆதவா நீ போகும்போது
    என் நினைவில் கொஞ்சம் கடனாய் எடுத்துசெல்
    நினைவின் சுமைகள் நித்தம் என்னை நெருடிக்கொல்கிறதே
    கண்கள் தூங்கும் நேரம் மனம் தாண்டவம் ஆடிடுதே
    கண்கள் விழித்த நேரம் மனம் மண்ணுள் துயில்கிறதே
    உலகும் செய்த பாவம் பல ஊரார் செய்த பாவம்

    Saturday, October 10, 2009

    நீதானே..நினைவாக.


    சின்னஞ்சிறு மொட்டுக்கள்
    சிட்டுக்களாய் சிறகடித்துதிரிந்த
    சிப்பிக்குள் இரட்டை முத்தாக-நாமும்
    சிலகாலம் உலகை மறந்திருந்தோம்-உலகும் தான் மறந்திருந்தது

    ஒற்றை மிட்டாயில்
    ஒரு வாய் ஒருகடி
    ஓராயிரம் சுவைகள் அதில்-உதட்டின்
    ஓரத்தில் படிந்த கறை அப்பபோது நாவிற்கு

    Wednesday, October 7, 2009

    நிலவைத்தேடி.......


    உனக்காக...
    காத்திருந்த தவிப்புக்கள்
    உளறாத வார்த்தைகளாய்-இன்னும்
    உள்ளத்தில் உறைந்துகிடக்கிறது

    இதயவாசலில்
    புகுந்திடும் குருதியிலும்
    உன்னைத்தேடிய துடிப்புகளின் எதிரொலி
    கேட்டுக்கொண்டுதான் கிடக்கிறது.

    இது காதலின் புது கோணமா..?










    நானும் காதலிக்கிறேன் என்றான் ஒருவன்
    என்னையும் காதலிக்கிறான் என்றாள் ஒருத்தி
    பரஸ்பரம் பாடிக்கொன்டார்கள்.
    ஏக்கத்தொனிக்கு விடைகொடுத்ததென்னவோ
    தொலைபேசி மணிதான்..
    மாறிவந்த அழைப்புத்தான் இவர் மாற்றத்துக்கு காரணம்.
    சாரி வ்ரோங் நம்பர் என தொடங்கிய கதைதான் இன்று

    சில உறவுகள்.....



    மதிமயங்கும் மாலை நேரம்
    சிந்தனைக்கு சிறகுகொடுக்க ஒதுங்கினேன்
    மாநகரின் ஆறாம் இலக்க சிறுநகர் கடற்கரை
    கதிரவன் கதிர்சுருக்க மெல்ல மிளிர்ந்த தாழையின் தழுவலும்
    நீலக்கடலின் நீளிசையும் சோலைக்குயிலின் செல்ல இசையும்
    சிறுகால் சிறுதொட்டு பரதமாடும் சிறுநண்டு
    அலைகள் தழுவும் பொன் மணல்மேடு
    யாவும் மோதும் மனதை மிதமாக்கி மெல்லத்தடவி

    எட்டியும் எட்டாத பழம்...



    காதலே நீ எங்கு சென்றாய்..?
    உயிர்தாகத்தின் கேள்வியாய்
    உறவுகள் பதித்த தடயத்திலேயே
    மீண்டும் கால் வைத்து நடக்கிறேன்.
    போகுமிடம் அறிந்தும் எதோ அதிசயம் நடந்திடாதா என்ற நம்பிக்கை.
    காதல் ஒரு அழகிய கொடிதான்
    கொடிதந்த மென் மலரிலே

    கன்னி கலையாத காதல்.


    நினைவுகள் நூறு
    கனவுகள் ஆயிரம்
    காதலன் கனவு அது
    கட்டி வைத்த மண் வீடோ
    நெஞ்சணைக்க பஞ்சணையும் வஞ்சனைக்கு பல நட்பும்-உண்டு இல்லையே
    வந்தணைக்க ஓர் நெஞ்சம்
    முந்தானை வாசமும்
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner