• Saturday, October 10, 2009

    நீதானே..நினைவாக.


    சின்னஞ்சிறு மொட்டுக்கள்
    சிட்டுக்களாய் சிறகடித்துதிரிந்த
    சிப்பிக்குள் இரட்டை முத்தாக-நாமும்
    சிலகாலம் உலகை மறந்திருந்தோம்-உலகும் தான் மறந்திருந்தது

    ஒற்றை மிட்டாயில்
    ஒரு வாய் ஒருகடி
    ஓராயிரம் சுவைகள் அதில்-உதட்டின்
    ஓரத்தில் படிந்த கறை அப்பபோது நாவிற்கு
    -இனிமை கொடுக்க மறந்ததில்லை
    மாலை நேரமல்ல
    மஞ்சள் வெயில் மல்லுகட்டும் நேரத்திலும்
    மணல் வீடு கட்டிய நம்கரங்கள்- தடயங்களாய் பதிந்துவிட்ட உன் மென் பாத சந்தன சுகந்தத்தை
    மணல்படிந்த அலைகள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.
    ரெட்டை பின்னலில்
    ரிபன்களோடு சேர்ந்து முடிந்துவிட்ட நம் பாசம்-தினமும்
    ரீங்கரித்துகொண்டிருகிறது - இடைவிடாது கண்களில் உந்தன் நினைவுகள்
    ரணங்களாய் வருடுகிறதே உஸ்ணம் இன்றும் குறையவில்லை
    எங்கள் நினைவுகளில்
    ஏதுமில்லை அன்று யாரும் இல்லை அன்று
    எல்லாம் நாமாக ஒரு கற்பனை-உணவோ.உடையோ. ஊரோ. உறவோ..
    எண்ணத்தில் ஏதுமில்லை - மறந்திருந்தோம் நீ மட்டும் நினைவுக்குள்
    கள்ளச்சிரிப்பு
    கன்னத்து சின்னக்குழி
    கவிழ்ந்ததும் அதில்தானோ..மீளவும் எண்ணவில்லை.
    கணங்களை இமைதழுவும் நேரமெல்லாம்
    கனிகிறது உன் நினைவு-காரணம் ஏன்தானோ..

    Post Comment

    0 comments:

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner