இமைகள் துடிக்கிறது
உன்னைக்காண
உதடுகள் தவிக்கிறது
என் காதலைச்சொல்ல
கைகள் வருடுகிறது பேனாவில்,
உணர்வால் கடிதம் வரைய
நெஞ்சம் கெஞ்சுகிறது
நேற்றைய நினைவுகள் பகிர
உரோமங்கள் நெருடுகிறது
உன் நுனிவிரல் வருடல்கள் காண
கண்களால் கேட்கின்றேன் என் காதலை ஏற்றுக்கொள்
கெஞ்சிய நெஞ்சமும் நெருடிய உரோமமும்
வருடிய கைகளும் தவித்த உதடுகளும்
உறைந்துவிடுகிறது உன் ஓரவிழி காண்கையில்-ஆதலால்
கண்களால் கேட்கின்றேன் என் காதலை ஏற்றுக்கொள்
உன்னை காணாதபோது துடித்த இமைகள் துடிக்கமறுக்கும்
இயல்பில் புரிந்திடு இவனின் இறைஞ்சல்களை-இலையேல்
இருஇமை ஒருமடலாகி விழியினுள் காதல் வலியுருக்கொண்டு
இறப்பேன் ஆனால் உயிருடன் இருப்பேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~