• Monday, December 28, 2009

    கண்களால் கேட்கின்றேன் என் காதலை ஏற்றுக்கொள்....

    8_love_hurts.gif image by funkbutter
                                    இமைகள் துடிக்கிறது 
                                                                                                       உன்னைக்காண
                                    உதடுகள் தவிக்கிறது 
                                                                                          என் காதலைச்சொல்ல
                                    கைகள் வருடுகிறது பேனாவில், 
                                                                                  உணர்வால் கடிதம் வரைய
                                    நெஞ்சம் கெஞ்சுகிறது
                                                                                      நேற்றைய நினைவுகள் பகிர
                                    உரோமங்கள் நெருடுகிறது
                                                                   உன் நுனிவிரல் வருடல்கள் காண 

    கண்களால் கேட்கின்றேன் என் காதலை ஏற்றுக்கொள்
    கெஞ்சிய  நெஞ்சமும் நெருடிய உரோமமும் 
    வருடிய கைகளும் தவித்த உதடுகளும் 
    உறைந்துவிடுகிறது உன் ஓரவிழி காண்கையில்-ஆதலால்

    கண்களால் கேட்கின்றேன் என் காதலை ஏற்றுக்கொள்
    உன்னை காணாதபோது துடித்த இமைகள் துடிக்கமறுக்கும் 
    இயல்பில் புரிந்திடு இவனின் இறைஞ்சல்களை-இலையேல்
    இருஇமை ஒருமடலாகி விழியினுள் காதல் வலியுருக்கொண்டு
    இறப்பேன் ஆனால் உயிருடன் இருப்பேன்.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Sunday, December 20, 2009

    ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கமலா..


    tears
    இருண்ட அறைக்குள்ள விட்டில் பூச்சியோட கதைபேசிகொண்டு கமலா
    என்னவோ ஏக்கம் கமலான்ர மனசுக்குள்ள
    பான்கூட போடல முகமெல்லாம் வியர்வை முட்டி மோதிட்டு இருந்துச்சு
    ஏன் என்டுகேக்குறமாதிரியே சின்னவன் மழலை மொழிபேச மெல்லமா தட்டிகொடுத்துகொண்டிருந்தாள்
    மெல்லமா கண்ணயர்ந்திட்டான் போல தூக்கிட்டுபோய் தொட்டில்லகிடத்தி ஆட்டிவிட்டு வந்திருந்தாள்
    இடையில ஏதோ நினைப்பு திடுக்கிட்டு எழும்பி அலுமாரிய தொறந்தாள் நேத்துதான் ஆபீசால வரெய்க சர்ச்சுக்கு முன்னால பய்மேண்டுகடையில நைற்றி  ஒன்டுவாங்கினவள் அளவோ எண்டுகூட பாக்கேல எடுத்துமாட்டிக்கொண்டாள்
    கட்டில் சீலைய கொஞ்சம் சரிப்பண்ணிவிட்டுடு சுவர்கறையா தலைய வச்சு

    Friday, December 18, 2009

    வேட்டைக்காரன் திரை விமர்சனம்....

    விஜய் படங்கள் என்றாலே அதிகமாக எனக்கு பிடிக்காத நிலையிலும் , அதிகப்படியான எதிர்ப்புகளை சம்பாதித்து அதன்மூலமாக விளம்பரம் தேடிக்கொண்ட வேட்டைக்காரன் அப்படி என்ன புதுசா சொல்லப்போறன் ஏன்டா ஆவலிலா நானும் VIP ஷோ பார்க்கப்போனன். (உண்மையா போனதுக்கு முக்கிய காரணம் டிக்கெட் ப்ரீயா கிடைச்சதுதான்).






    வழக்கம்போல விஜய்க்கே உரிய உயிர் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோட இரவு 11  மணி காட்சிக்கு 8 மணிக்கே திரண்டிருந்தனர்  ஆரவாரத்துடன். ஒருவாறாக அடித்துபிடித்து உள்ளே நுழைந்து வசதியான சீட்ட தேடி இருக்க ஒருவாறாக நள்ளிரவு 12 மணிக்கு ஏவிஎம் பெயர் திரையில விழ அப்பவே ஆரவாரம் தொடங்குகிறது.  அப்புறம் ஓரிரு வினாடிகளில் ரஜனியின் ஸ்டைலில் அறிமுகமாகிறார் நம்ம தளபதி. அப்போ பரந்த விசில் சத்தங்களில் என் காது சவ்வு கிழிந்துவிட்டது போலிருந்தது. (மனசுக்குள்ள ஜோசிததுகோண்டன் இப்பவே சவ்வு கிளிஞ்சுட்டுதேண்டா அப்புறம் தளபதிக்கு வேலை இருக்காதே எண்டு)

    Monday, December 14, 2009

    சுடும் என நினை மறவா.



    தலைமுறை ஒன்று ஓடிச்சென்றது 
    விதிமுறை பல மாற்றிச்சென்றது.
    நம் ஓசை ஓங்கி ஒலித்தபோது 
    இசைபாடி அசைபோட்ட பலரிங்கு 
    வசைபாடி நசை பேசுகின்றார் -தசைகள் துடிக்கிறதே 
    வீழ்பவன் இவன் என்றுலகும் கதை சொல்கிறதே- பதில் சொல்லிடுவோம் 
    மனைகள் கொண்ட கணைகள்
    வினைகள் செய்ததன் வினைகள்
    சுற்றும் உலகு நிற்கும் முன்னர் 
    சுடும் என நினை மறவா

    Tuesday, December 8, 2009

    பக்கம் இருந்தும் விலகிப்போகிறேன்...


    நித்தம் ஒரு சந்தமாய்
    முத்தம் என்ற சொல்லினால்
    என் உள்ளம் கொண்ட
    பெண்ணல்ல.. 
    பேரழகு - என்னுயிர்
    அருகில் இருந்து 
    அனைத்துமாகினாய்
    சூரியகதிர்களில் 
    பனிமழை தந்தாய்
    நிலவின் தண்மையில் 
    உஷ்ணம் தந்தாய்
    புயலின் வாயினில் 
    தென்றலாய் கமழ்ந்தாய்
    கொட்டும் மழையில் - உன் 
    குடைக்குள் அணைத்தாய்..!
    திட்டும் உலகின் 
    வஞ்சனை பொறுத்தாய்
    திகட்டும் இன்பம் 
    தீண்டப்பொறுத்தாய்..!

    உடலாகி உயிராகி
    சுகமாகி ரணமாகி
    நிழலாகி நினைவாகி
    ஒளியாகி இருளாகி
    தாயாகி சேயாகி
    யாதுமாகி நின்றாய்
    'போதும்' என்ற சொல்லின் 
    சுகங்கள் கொண்டேன்..

    வெற்று உடலுக்குள் 
    தூறும் மழையாக
    சுகங்கள் தந்தவளே !
    தூற்றும் உலகை 
    வென்றுகாட்ட
    பக்கம் இருந்தும் 
    விலகிப்போகிறேன்.
    சொர்க்கத்தின் வேதனை
    வேதனையில் சொர்க்கம் - காதல்.
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner