• Monday, December 14, 2009

    சுடும் என நினை மறவா.



    தலைமுறை ஒன்று ஓடிச்சென்றது 
    விதிமுறை பல மாற்றிச்சென்றது.
    நம் ஓசை ஓங்கி ஒலித்தபோது 
    இசைபாடி அசைபோட்ட பலரிங்கு 
    வசைபாடி நசை பேசுகின்றார் -தசைகள் துடிக்கிறதே 
    வீழ்பவன் இவன் என்றுலகும் கதை சொல்கிறதே- பதில் சொல்லிடுவோம் 
    மனைகள் கொண்ட கணைகள்
    வினைகள் செய்ததன் வினைகள்
    சுற்றும் உலகு நிற்கும் முன்னர் 
    சுடும் என நினை மறவா
    .

    காலம் வென்ற காலனவன் 
    கரிகாலனவன்
    வேழம் தரித்த சோழனவன் 
    திரை வேங்கையவன்
    இவன் பயமறியான் என்றும் நெறிபிறலான்
    கொண்ட கருமம் நிறைவேற்ற
    மாண்ட மறையர்புகழ் பறைசாற்ற
    மிடுக்கென வந்து திகழ் பல கொண்டு
    உண்மை நிறுத்தி உறவை காப்பான்
    கொற்றவனவன் உனக்கு கூற்றுரைப்பான். 

    Post Comment

    0 comments:

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner