• Tuesday, December 8, 2009

    பக்கம் இருந்தும் விலகிப்போகிறேன்...


    நித்தம் ஒரு சந்தமாய்
    முத்தம் என்ற சொல்லினால்
    என் உள்ளம் கொண்ட
    பெண்ணல்ல.. 
    பேரழகு - என்னுயிர்
    அருகில் இருந்து 
    அனைத்துமாகினாய்
    சூரியகதிர்களில் 
    பனிமழை தந்தாய்
    நிலவின் தண்மையில் 
    உஷ்ணம் தந்தாய்
    புயலின் வாயினில் 
    தென்றலாய் கமழ்ந்தாய்
    கொட்டும் மழையில் - உன் 
    குடைக்குள் அணைத்தாய்..!
    திட்டும் உலகின் 
    வஞ்சனை பொறுத்தாய்
    திகட்டும் இன்பம் 
    தீண்டப்பொறுத்தாய்..!

    உடலாகி உயிராகி
    சுகமாகி ரணமாகி
    நிழலாகி நினைவாகி
    ஒளியாகி இருளாகி
    தாயாகி சேயாகி
    யாதுமாகி நின்றாய்
    'போதும்' என்ற சொல்லின் 
    சுகங்கள் கொண்டேன்..

    வெற்று உடலுக்குள் 
    தூறும் மழையாக
    சுகங்கள் தந்தவளே !
    தூற்றும் உலகை 
    வென்றுகாட்ட
    பக்கம் இருந்தும் 
    விலகிப்போகிறேன்.
    சொர்க்கத்தின் வேதனை
    வேதனையில் சொர்க்கம் - காதல்.

    Post Comment

    0 comments:

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner