ஆராரோ ஆரிரரோ
கண்மணியே கண்ணுறங்கு
அன்னையவள் கண்முன்னே
கண்ணுறங்கு கண்மணியே
தாயழுது.. நானழுது.. ஊரழுது.. உறவழுது..
நாய்கூட இரங்கவில்லை சேயழுது இரங்கிடுமோ செல்வமகனே! 

கண்ணுண்டு கருணையில்லை
பெண்ணுண்டு தாய்மையில்லை
உறவொன்று அங்கு உண்டு
உதவிஎன்று ஒன்றுமில்லை









