• Thursday, July 8, 2021

    முன்னனுபவம் உள்ளவர்க்கு மட்டும் புரியும் கதை !


    நிலவு தேய்ந்த அந்தகார இரவுகள்
    காற்றுக்கு வேலி போடும் ஒற்றைப் போர்வை
    ஒரே தலையணை !
    போர்வைக்குள் பொழியும் நிலவாய் நீ !

    முகம்பார்த்து விரல்மேய
    நவரசம் காட்டும் திரை !
    உன் நெளிவுகளில்
    நிலைகொள்ளும் கரம் !
    அவ்வப்போது சிணுங்கும் நீ !
    அள்ளி அணைக்கும் நான் !
    காதோரம் உன் ஸ்பரிசக் கதகதப்பு !
    உன்னில் படிந்தே பேசும் என் உதடுகள் !
    உன்மத்தம் கொண்ட விழிகள் !
    என் வியர்வையில் குளிக்கும் நீ !
    உன் அயர்வினை அறியா நான் !
    நிசப்தமான நின் மூச்சு !
    உன் உயிர் இருக்கும் இடம் நாடி
    உயிர் ஊட்டும் நிமிஷங்கள் !
    பின் ஏகாந்த நினைவுகள் !
    மீண்டும் சிணுங்கும் நீ..!
    அள்ளி அணைக்கும் நான்...!

    மெத்தைக்கு கேளாத சத்தத்தில்
    முத்தப் பயிர் செய்தோம் !
    நீண்டன ஒய்யார இரவுகள்...
    நகர்ந்தன நாட்கள் ...
    உன் நளினம் மாறவும் இல்லை !
    உன் பருத்த தேகம் மீது
    மையல் குறையவும் இல்லை !
    கூடாத பொழுதும் இல்லை
    சேராத இடமும் இல்லை !
    தேடிவரும் போதெல்லாம்
    திகட்டாத இன்பம் தந்தாய் !

    இன்றோ நாடி உன்னை நிக்கையிலே
    நெடுதூரம் போனதென்ன ?
    ஒட்டிய வயிறுடனும் ஒய்யார கலருடனும்
    பக்கம் பலர் இருந்தும்
    பருத்தவளே ! கருத்தவளே !
    உனைத்தானே உள்மனசு தேடுதடி !
    நீபோன வழியில் விழி வைத்து நிற்கிறேன் !
    வந்துவிடு என் 'நோக்கியா' ஃபோனே !
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Post Comment

    0 comments:

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner