• Wednesday, October 7, 2009

    கன்னி கலையாத காதல்.


    நினைவுகள் நூறு
    கனவுகள் ஆயிரம்
    காதலன் கனவு அது
    கட்டி வைத்த மண் வீடோ
    நெஞ்சணைக்க பஞ்சணையும் வஞ்சனைக்கு பல நட்பும்-உண்டு இல்லையே
    வந்தணைக்க ஓர் நெஞ்சம்
    முந்தானை வாசமும்
    பெயரளவில் தான் போலும்

    நீண்டு வளர்ந்த நினைவுகள்
    காணத்துடித்த கனவுகள்
    கானல் நீர்தானோ-கனியும்
    இலவம் பழமோ
    நீரோடும் இலைபோலே
    வாழ்வோடு ஏனோ நானும்
    உறவோடும் உள்ளங்கள்
    உறைந்துவிட்ட காரணத்தால்
    இருந்தும் காத்திருக்கிறேன்
    கல்லையும் கனியவைக்கும் என் நினைவுகள்.

    Post Comment

    3 comments:

    nis said...

    நல்லா இருக்கு

    Tharshy said...

    உறவோடும் உள்ளங்கள்
    உறைந்துவிட்ட காரணத்தால்
    lol nice one...

    அதென்ன கருத்து சொல்லாமல் போகாதீர்கள்...சொல்லிட்டு போனா காசு அனுப்புவீங்களோ>???? வளரமாட்டேங்கிறாங்களே...:)

    Ashwin-WIN said...

    வந்தா சொல்லிட்டு போறதுதானே முறை... சேர்த்து வச்சு பாங்க்ல போட்டுவிடுறன்.

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner