• Wednesday, August 19, 2009

    வாரணம் ஆயிரம் கொண்டான்





    கவிஞனின் கவிஞன் நீ 
    கலைத்தாயின் கடைக்குட்டி

    கறைபடியா வர்ணமேகிய 
    புரையோடும் தமிழன் நீ
    தென்றலில் தேனெடுத்து 
    அன்றிலில் அமுதாக்கிய அழகன் நீ
    மன்றமும் மாநாடும் நாடும் 
    கவியோடும் கலைக்கடல் நீ
    மழலையின் தாயமுதும்

     
    குழந்தையின் மணல்வீடும்
    இளைஞனின் காதலியும் 
    முதுமையின் தடிக்கம்பும்
    உன் கவிதைதானே மறைத்தமிழா!

    கண்களால் கவிவரைந்து 
    மிடுக்கென கொண்ட மீசை அபிநயம் போட
    கம்பீர கணீர் மொழியில் நீ உரைத்தால் 
    உயிர் பெறாக்கவிதையும் உண்டோ!
    ம்..உன்னை நான் பாடக்காரணம் தேடுகிறாயா??
    "வாரணம் ஆயிரம் கொண்டான் வர்ணமே நான் கொண்டேன்."
    உன் புகழ் நான் பாடின் உன்னொடு 
    என் வர்ணமும் அரியணையேகும்

    என்றோர் நப்பாசைதான் என்றால் தப்பா?

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Post Comment

    3 comments:

    ஆர்வா said...

    என்னவோ உள்குத்து இருக்கு.....

    Ashwin-WIN said...

    இதுல என்னையா உள்குத்து வெளிக்குத்து...?

    ம.தி.சுதா said...

    அருமையாக இருக்கிறது...

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner